சங்கீதம் 86: உண்மையான விண்ணப்பம் – நாம் தேவனிடம் எப்படி ஜெபிக்க வேண்டும்? | SPC Tuticorin

நாம் தேவனிடம் எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும்?

Psalm 86 Bible Study Tamil, சங்கீதம் 86 விளக்கம், Tuticorin Church Blog, How to pray effectively Tamil

சங்கீதம் 86 ஜெபம் பற்றிய விளக்கம் - SPC Tuticorin Blog

ஜெபம் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல;

அது நம் படைப்பாளரோடு நாம் கொள்ளும் ஆழமானத் தொடர்பு. சங்கீதம் 86-ன் அடிப்படையில், நாம் தேவனிடம் எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும்? என்பதை விவிலிய உதாரணங்களோடு கீழே காண்போம்.


உண்மையான விண்ணப்பத்திற்கான 12 வழிகள்:

1. தன்னை தாழ்த்த வேண்டும்

  • Ex: Tax Collector (ஆயக்காரன்)
  • “நான் பாவி” என்று தன்னைத் தாழ்த்திக்கொண்டான். தாழ்மையுள்ளவனே தேவ கிருபையைப் பெறுகிறான்.

2. பக்தியுள்ளவனாய் இருக்க வேண்டும்

  • Ex: Zechariah (சகரியா)
  • அவன் தனக்கு பிள்ளை இல்லை ஆனாலும் சோர்ந்து போகாமல் தேவனை உண்மையோடு சேவித்தான்.

3. தேவனை நம்ப வேண்டும்

  • Ex: நூற்றுக்கு அதிபதி
  • “ஒரு வார்த்தை சொன்னால் போதும் என் வேலைக்காரன் பிழைப்பான்” என்றான். அசைக்க முடியாத விசுவாசமே ஜெபத்தின் பலம்.

4. நாடோறும் ஜெபிக்க வேண்டும்

  • Ex: Daniel (தானியேல்)
  • ஜெபிக்க கூடாது என்ற கட்டளை இருந்த போதும், வழக்கத்தின்படி ஒரு நாளில் 3 முறை முழங்கால் படியிட்டு ஜெபித்தான்.

5. அவரை உயர்த்தி போற்ற வேண்டும்

  • Ex: David (தாவீது)
  • சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும், அவன் எப்போதும் தேவனைப் புகழ்ந்தான்.

6. தேவனுக்கு பயந்து நடக்க வேண்டும்

  • Ex: People of Nineveh (நினிவே மக்கள்)
  • தேவனுக்கு பயந்து, தங்கள் தீய வழிகளை விட்டு மனந்திரும்பினார்கள்.

7. ஒருமுகமான இருதயம்

  • Ex: Apostles (அப்போஸ்தலர்)
  • பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் அனைவரும் ஒரே மனதோடு ஜெபத்தில் இருந்தார்கள்.

8. தேவனை மகிமைப்படுத்த வேண்டும்

  • Ex: Jesus Christ (இயேசு)
  • நமது முன்மாதிரியான இயேசு, அவருடைய வாழ்க்கை முழுவதும் பிதாவாகிய தேவனை மகிமைப்படுத்தினார்.

9. நன்றி செலுத்த வேண்டும்

  • Ex: One leper who returned
  • சுகமடைந்த 10 பேரில் ஒருவன் மட்டும் திரும்பி வந்து நன்றி சொன்னான். நன்றியுள்ள இதயம் தேவனுக்குப் பிரியம்.

10. என்ன நடக்கிறது என்று கூற வேண்டும்

  • Ex: Hannah (அன்னாள்)
  • மனிதர்களிடம் புலம்பாமல், தன் துக்கத்தை தேவனிடம் மட்டும் கொட்டித் தீர்த்தாள்.

11. மனதில் உள்ளதை வெளிப்படுத்த வேண்டும்

  • Ex: Job (யோபு)
  • யோபு தன் வேதனையையும் சந்தேகத்தையும் மறைக்காமல் தேவனிடம் வெளிப்படையாகச் சொன்னான்.

12. அடையாளம் கேட்டு வேண்டுதல்

  • Ex: Gideon (கிதியோன்)
  • தேவனுடைய சித்தத்தை அறிய அடையாளம் கேட்டு உறுதி பெற்றான். இதே மாதிரி, எசேக்கியா கூட அடையாளம் கேட்டான்.

முடிவுரை

சங்கீதம் 86 நமக்கு சொல்லுவது: ஜெபம் என்பது வெறும் Formal (சடங்கு) கிடையாது. அது ஒரு உண்மையான உறவு ❤️.

நாமும் இந்த மாதிரி இதயப்பூர்வமாக ஜெபித்தால், நம் தேவன் நிச்சயம் நம் விண்ணப்பத்தைக் கேட்பார்!

Christian lifestyle blog Tuticorin, தாவீதின் சங்கீதம் 86, Bible examples of prayer, SPC Tuticorin updates

shared by : Amy


Discover more from SPC Tuticorin

Subscribe to get the latest posts sent to your email.